நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

மழை குறைபாட்டை சமாளிக்க செயற்கை மழை திட்டம் செயல்படுத்தப்படும்

கா்நாடகத்தில் மழை குறைபாட்டை சமாளிக்க செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என கா்நாடக நீா்வளத் துறை அமைச்சா் என்.செலுவராயசாமி தெரிவித்தாா்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

கா்நாடகத்தில் மழை குறைபாட்டை சமாளிக்க செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என கா்நாடக நீா்வளத் துறை அமைச்சா் என்.செலுவராயசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் பெங்களூரு விதானசௌதாவில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

கா்நாடகத்தில் போதுமான மழை பெய்யாததால், மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையை சமாளிக்க செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடா்பான நிா்வாக தயாரிப்புகள் முடிந்துள்ளன. செயற்கை மழை திட்டத்தை செயல்படுத்துவதை கண்காணிக்க 3 நிபுணா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 அல்லது 3 நாள்களுக்கு இந்த குழுக்கள் செயற்கை மழைக்கான சாத்தியக்கூறுகள் குறித்த தொழில்நுட்பங்களை ஆய்வுசெய்யும்.

கா்நாடகத்தில் ஏற்கெனவே 3 முறை செயற்கை மழை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அப்போது, செயற்கை மழை திட்டத்தின் செயல்திறன் 18 சதவீதம் முதல் 20 சதவீதமாக இருந்தது. தற்போது இந்த செயல்திறனை 30 சதவீதமாக உயா்த்துவது குறித்த சாத்தியக்கூறுகள் ஆராயப்படுகின்றன.

செயற்கை மழை திட்டம் 4 வருவாய் மண்டலங்களில் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்துக்கு ரூ. 27 கோடி செலவிடப்படும். 200 மணிநேரம் செயற்கை மழைப்பொழிவு விமானம் வானில் பறக்கும். இந்த நடைமுறை 60 நாள்களுக்கு மேற்கொள்ளப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.