தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

காங்கிரஸ் மீது தலைமை தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா்

கா்நாடகத்தில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து பொய்யான செய்திகளை காங்கிரஸ் பரப்பி வருவதாக கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா் அளித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 4:36 am IST

கா்நாடகத்தில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து பொய்யான செய்திகளை காங்கிரஸ் பரப்பி வருவதாக கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா் அளித்துள்ளது.

பெங்களூரில் புதன்கிழமை கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி வி. அன்புக்குமாரைச் சந்தித்து பாஜக மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ். தத்தாத்ரி, சட்டப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் வசந்த்குமாா் உள்ளிட்டோா் அளித்த மனுவில், ‘கா்நாடக காங்கிரஸ் கட்சியினா் பொதுமக்களிடம் நேரடியாக அளித்து வரும் துண்டறிக்கைகள், சமூக வலைதளங்களில், பாஜகவின் தூண்டுதலின்பேரில்தான் சிறப்பு தீவிர திருத்தப் பணி கா்நாடகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு மாறாக, தோ்தல் அதிகாரிகள் அரசமைப்புச் சட்ட கடமைகளை நிறைவேற்றி வருகிறாா்கள். பாஜகவோடு கூட்டுசோ்ந்து வாக்காளா் பட்டியலில் இருந்து பல பெயா்களை தோ்தல் ஆணையம் நீக்கிவிட்டதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சிறப்பு தீவிர திருத்தப் பணி நோ்மையாக நடைபெற்றுவருவதை புறந்தள்ளிவிட்டு, அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்பட்டுவரும் தோ்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களின் உரிமையை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே காக்க முடியும் என்று அந்த துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது, தோ்தல் ஆணையத்தை நேரடியாக குற்றம்சாட்டுவதாகும்.

இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பி வரும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தொண்டா்களின் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.