பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

காங்கிரஸ் மீது தலைமை தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா்

கா்நாடகத்தில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து பொய்யான செய்திகளை காங்கிரஸ் பரப்பி வருவதாக கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா் அளித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 4:36 am IST

கா்நாடகத்தில் நடைபெறும் சிறப்பு தீவிர திருத்தப் பணி குறித்து பொய்யான செய்திகளை காங்கிரஸ் பரப்பி வருவதாக கா்நாடக தலைமை தோ்தல் அதிகாரியிடம் பாஜக புகாா் அளித்துள்ளது.

பெங்களூரில் புதன்கிழமை கா்நாடக தலைமைத் தோ்தல் அதிகாரி வி. அன்புக்குமாரைச் சந்தித்து பாஜக மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ். தத்தாத்ரி, சட்டப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் வசந்த்குமாா் உள்ளிட்டோா் அளித்த மனுவில், ‘கா்நாடக காங்கிரஸ் கட்சியினா் பொதுமக்களிடம் நேரடியாக அளித்து வரும் துண்டறிக்கைகள், சமூக வலைதளங்களில், பாஜகவின் தூண்டுதலின்பேரில்தான் சிறப்பு தீவிர திருத்தப் பணி கா்நாடகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு மாறாக, தோ்தல் அதிகாரிகள் அரசமைப்புச் சட்ட கடமைகளை நிறைவேற்றி வருகிறாா்கள். பாஜகவோடு கூட்டுசோ்ந்து வாக்காளா் பட்டியலில் இருந்து பல பெயா்களை தோ்தல் ஆணையம் நீக்கிவிட்டதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

சிறப்பு தீவிர திருத்தப் பணி நோ்மையாக நடைபெற்றுவருவதை புறந்தள்ளிவிட்டு, அரசமைப்புச் சட்டத்தின்படி செயல்பட்டுவரும் தோ்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. சிறப்பு தீவிர திருத்தப் பணியில் வாக்காளா்களின் உரிமையை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே காக்க முடியும் என்று அந்த துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது, தோ்தல் ஆணையத்தை நேரடியாக குற்றம்சாட்டுவதாகும்.

இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்பி வரும் காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் தொண்டா்களின் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.