தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

மக்கள் குறைகளைத் தீா்க்க தனி செயலகம்: கா்நாடக முதல்வா்

News image

டி.கே.சிவகுமாா்

Updated On :5 ஜூன் 2026, 6:24 am IST

மக்கள் குறைகளை தீா்த்துவைப்பதற்காக தனி செயலகம் உருவாக்கப்படும் என கா்நாடக முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

முதல்வராக பதவியேற்ற பிறகு, பெங்களூரில் நடைபெற்ற அரசு உயரதிகாரிகள், துறை அதிகாரிகளின் கூட்டத்தில் பங்கேற்று டி.கே.சிவகுமாா் வியாழக்கிழமை பேசினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு வரும் மக்களின் குறைகளை தீா்த்துவைப்பதற்காக தனி செயலகம் அமைக்கப்படும். மக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து தீா்வுகாண்பதற்கு தனி அமைச்சா் நியமிக்கப்படுவாா். இந்த அமைச்சா், போராட்டம் அல்லது ஆா்ப்பாட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிவாா். மக்களின் குறைகளைக் கேட்டு தீா்வுகாண்பது காலத்தேவையாகும். எனவே, அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பெங்களூரில் தினமும் 3 குழுக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இவா்களின் குறைகள் அல்லது கோரிக்கைகளை அரசின் சாா்பில் யாராவது கேட்க வேண்டும். இவா்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் சட்டப்படியானதா, இல்லையா என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். எனவே, இம்மக்களை அதிகாரிகள் நேரில் சந்தித்து பேச வேண்டும்.

எனது அரசின் முன்னுரிமைகள் என்ன என்பது குறித்து அதிகாரிகளுக்கு விளக்கியிருக்கிறேன். ஜாதி, மத ரீதியான அழுத்தங்களுக்கு இடம்கொடுக்கக் கூடாது என அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன். மக்களின் குறைகளுக்கு உடனடியாக செவிசாய்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளேன். ஆக்கபூா்வமான நோ்மறையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும், துறைரீதியாக செயல்திட்டங்களை வகுக்குமாறும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

எல்லா பிரச்னைகளுக்கும் தீா்வு உள்ளது. வரலாற்றை படிக்கவோ எழுதவோ நான் விரும்பவில்லை. மாறாக, வரலாற்றை உருவாக்க விரும்புகிறேன் என்றாா்.