கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சேதமடைந்த சாலை: எம்எல்ஏவை சூழ்ந்த பொதுமக்கள்

காஞ்சிபுரம், ஜன. 8: திருப்பருத்திக்குன்றம் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் எம்எல்ஏவை சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனால் அப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

காஞ்சிபுரம், ஜன. 8: திருப்பருத்திக்குன்றம் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சரிசெய்ய வலியுறுத்தி காஞ்சிபுரம் எம்எல்ஏவை சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனால் அப் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் எம்எல்ஏ சக்தி பெ.கமலாம்பாள் சொந்த வேலையாக திருப்பருத்திக்குன்றம் சாலை வழியாகச் சென்றார். அப்போது சேதமடைந்த சிறு பாலத்தின்கீழ் மரக் கட்டைகள் போடப்பட்டிருந்தன. அப்போது அங்கு அவர் காரை நிறுத்தியபோது அப் பகுதி மக்கள் திடீரென்று சூழ்ந்து கொண்டனர்.

மணல் லாரிகளால் இச் சாலை சேதமடைந்துவிட்டதாகவும், பாலங்கள் உடைந்து விட்டதாகவும், இதனை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். அவரை பொதுமக்கள் திடீரென்று சூழ்ந்து கொண்டதால் பாதுகாப்பு கருதி அப் பகுதிக்கு போலீஸôர் வரவழைக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை வரவழைத்து எம்எல்ஏ சக்தி பெ.கமலாம்பாளர்

பேச்சுவார்த்தை நடத்தினார். சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அப் பகுதியில் மண் கொட்டி உடனடியாக தற்காலிகமாக சரி செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். பின்னர் துணை வட்டாட்சியர் சந்திரசேகரை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். இச் சாலையை சீரமைப்பது தொடர்பாக ஒரு திட்ட அறிக்கை தயாரித்து உரிய அதிகாரிகளுக்கு அனுப்பும் படியும் வலியுறுத்தினார். இச் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.