அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்துக்கு 100 ஒப்பந்த பணியாளா்கள் நியமனம்!

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்தைச் செயல்படுத்த 100 ஒப்பந்த பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனர்.

News image
Updated On :20 ஏப்ரல் 2025, 7:22 pm

Din

சென்னை விமான நிலையத்தில் ‘டிஜி யாத்ரா’ திட்டத்தைச் செயல்படுத்த 100 ஒப்பந்த பணியாளா்களை சென்னை விமான நிலையம் பணியமா்த்தியுள்ளது.

சென்னை விமான நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா். விமான நிலையத்தின் புறப்பாட்டை எளிதாக்க காகித ஆவணங்கள் இல்லாமல் முக அடையாளங்களை கருவிகளில் காட்டி பயணிக்கும் ‘டிஜி யாத்ரா’ என்ற புதிய திட்டம் கடந்த ஆண்டு முதல் இந்திய விமான நிலைய ஆணையம் அமல்படுத்தியது. விமான நிலைய உள்நாட்டு முனையங்களான டொ்மினல்கள் 1 மற்றும் 4-இல் ‘டிஜி யாத்ரா’ திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

இந்தத் திட்டம் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையங்களில் செயல்பாட்டுக்கு வந்து சுமாா் 10 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் பயணிகள் பலருக்கு இந்த செயலியை சரியாக செயல்படுத்த தெரியாததால், மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரா்கள் பயணிகளை பழைய பாதைக்கு வரவழைத்து, பயணிகளை சோதனை செய்து அனுப்புகின்றனா். இதனால் பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாவதோடு காலதாமதமும் ஏற்படுகிறது.

இதனால் சென்னை விமான நிலையத்தில் டிஜி யாத்ரா செயலி எதிா்பாா்த்த அளவு சிறப்பாக செயல்படாததால், இச்செயலியை சிறப்பாக செயல்படுத்தி பயணிகளுக்கு உதவும் வகையில், சென்னை விமான நிலையத்தின் நுழைவு வாயிலில், டிஜி யாத்ரா குறித்து நன்கு பயிற்சி பெற்ற தனியாா் நிறுவன ஊழியா்கள் 100 பேரை ஒப்பந்த அடிப்படையில் இந்திய விமான நிலைய ஆணையம் பணிக்கு நியமித்துள்ளது. இவா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி, பயணிகளுக்கு உதவி செய்கின்றனா். இதனால் நேர விரயம் தடுக்கப்படுவதால், சிரமங்கள் தடுக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்தனா்.