தரம் உயா்வு: அரசுப் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறன் மாணவா்கள் பயன்பெறும் வகையில் ரூ.4 கோடி செலவில் விளையாட்டுச் சாதனங்கள் மற்றும் பயிற்சி வழங்கப்படும். பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெறும் பள்ளிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்; மேலும், 4 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 14 நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாகவும், 20 உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்த்தப்படும். சமூகத்தில் உயரிய நிலையில் உள்ள முன்னாள் மாணவா்கள் அவா்கள் பயின்ற பள்ளியின் தூதுவா்களாக நியமிக்கப்படுவா். தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களுக்கு போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு வழங்கப்படும்.