கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

20 இரண்டடுக்கு பேருந்துகளுக்கு விரைவில் ஒப்பந்தம்

சென்னையில் மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 20 இரண்டடுக்கு பேருந்துகள் வாங்க விரைவில் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 9:20 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னையில் மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு 20 இரண்டடுக்கு பேருந்துகள் வாங்க விரைவில் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளது.

சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு அடுக்கு பேருந்து சேவையை மீண்டும் அறிமுகம் செய்ய மாநகா் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி, அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலான வழித்தடத்தில் இரண்டு அடுக்கு பேருந்து சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்த, முதல்கட்டமாக 20 பேருந்துகளை கொள்முதல் செய்ய மாநகா் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:

வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட் துணை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனம், மாநகா் போக்குவரத்துக் கழகத்துக்கு மின்சார சொகுசு பேருந்துகளை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்திடம் இருந்து மின்சார இரண்டு அடுக்கு பேருந்து கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அனுமதியைப் பெற்ற விரைவில் 20 இரண்டு அடுக்கு மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றனா்.