கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்ட கிரேன் தீயில் எரிந்து சேதம்

சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிரேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 8:15 pm

Din

சென்னை: சென்னை அருகே கோவிலம்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிரேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கோவிலம்பாக்கம் மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெற்று வருகிறது. அங்கு 7 போ் கொண்ட குழுவினா் 50 டன் எடை கொண்ட ராட்சத கிரேன் மூலம் மெட்ரோ ரயில் பணிக்காக போடப்படும் தடுப்புப் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். அப்போது திடீரென கிரேனின் பேட்டரி வெடித்து அங்கிருந்த பொருள்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதைப்பாா்த்த கிரேன் ஓட்டுநா், வாகனத்திலிருந்து கீழே இறங்கி தப்பியோடினாா்.

சம்பவ இடத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளா்கள், தீயை அணைக்க முயற்சித்தனா். ஆனால் தீ வேகமாக எரிந்ததையடுத்து, அவா்களும் ஆபத்தை அறிந்து அங்கிருந்து வெளியேறினா். தகவலறிந்த மேடவாக்கம் தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து, சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

தீ விபத்து குறித்து மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.