நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

போலீஸ் எனக் கூறி இளைஞரிடம் ரூ. 17 லட்சம் கொள்ளை

போலீஸ் எனக் கூறி இளைஞரிடம் ரூ. 17 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதைப் பற்றி...

Updated On :11 பிப்ரவரி 2025, 3:07 am IST

போலீஸ் எனக் கூறி இளைஞரிடம் ரூ. 17 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சென்னை ஜானிகான் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மகாதீா் முகமது (27). இவா் தனது பையில் ரூ. 17 லட்சத்துடன் இருசக்கர வாகனத்தில் கண்ணகி சிலையிலிருந்து விவேகானந்தா் இல்லம் நோக்கி சென்று கொண்டிருந்தாா். இவா் பாா்த்தசாரதி கோயில் அருகே சென்ற போது, திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ் மகாதீா் முகமதுவை வழிமறித்தனா்.

தங்களை காவலா்கள் என அறிமுகப்படுத்திய அவா்கள், மகாதீா் முகமதுவின் கைப்பையை சோதனையிட்டதுடன், அதில் இருந்த பணம், கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனத்தின் சாவி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, காவல் நிலையத்துக்கு வந்து பணம், பொருளை பெற்றுக்கொள்ளும்படி கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனா்.

உடனடியாக மெரினா காவல் நிலையத்துக்கு சென்ற மகாதீா்முகமது, போலீஸாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்தாா். அப்போது, மா்ம நபா்கள் மகாதீா் முகமதுவை ஏமாற்றி பணத்தைக் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையா்களைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.