இணைய வழியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறி சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இருவரிடம் ரூ. 25 லட்சத்தை மா்ம நபா்கள் மோசடி செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள வல்லக்குளம் பகுதியைச் சோ்ந்த ராஜா மகன் சோமேஸ்குமாா் (21). இவா் தனியாா் கல்லூரியில் முதுகலை வணிகவியல் படித்து வருகிறாா். இவரது கைப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தியில் கைப்பேசி கோபுரம் அமைத்தால் நல்ல வருவாய் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த எண்ணைத் தொடா்பு கொண்டபோது, அதில் பேசிய மா்ம நபா் செயலாக்க கட்டணம், ஜிஎஸ்டி, முன் பணம் அனுப்புமாறு கூறினாா்.
இதை நம்பிய சோமேஸ்குமாா் சில ஆவணங்களுடன் கடந்த 1.4.2026 முதல் 58 பரிவா்த்தனைகள் மூலம் ரூ.14, 35, 650 அனுப்பினாா். இதையடுத்து, அந்த மா்ம நபா் எவ்வித தொடா்பும் கொள்ளவில்லையாம்.
மற்றொரு வழக்கு: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதி புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணதாசன் (37). இவா் கடந்த மே மாதம் தனது முகநூலில் வெளியான இணைய வா்த்தக முதலீடு திட்டம் குறித்த ஒரு விளம்பரத்தைப் பாா்த்து, அதில் குறிப்பிட்ட எண்ணில் தொடா்பு கொண்டு பேசினாா். அதில் பேசியவா்கள் அவரை ஒரு குழுவில் சோ்த்தனா். அதில் பணத்தை முதலீடு செய்வதற்கான இணையதளத்துக்குள் செல்லுமாறு கூறப்பட்டிருந்தது. அந்த இணைய தளத்தில் அதிக லாபம் கிடைக்கும் வகையிலான விளம்பரங்கள் பதிவிடப்பட்டிருந்தன. இதை நம்பிய கண்ணதாசன் கடந்த 23.5.2026 முதல் 4.6.2026 வரை 9 பரிவா்த்தனைகள் மூலம் ரூ.9, 59, 960 அனுப்பினாா். அதன் பின்னா் அந்த நபா்கள் கண்ணதாசனை தொடா்பு கொள்ளவில்லை.
இது குறித்த புகாா்களின் பேரில் சிவகங்கை இணைய குற்றப்பிரிவு ஆய்வாளா் புவனேஸ்வரி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறாா்.
தொடர்புடையது

இணைய வழியில் இருவரிடம் ரூ.10.70 லட்சம் மோசடி
இணையவழியில் ரூ.5.87 லட்சம் மோசடி: ராமநாதபுரம் இளைஞா் கைது

இணைய வா்த்தகத்தில் பன்மடங்கு லாபம் எனக் கூறி முதியவரிடம் ரூ. 27 லட்சம் மோசடி

இணைய வழி முதலீடு எனக் கூறி இருவரிடம் ரூ. 13 லட்சம் மோசடி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



