3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

சென்னை சென்ட்ரல் வழியாகச் செல்லும் விரைவு ரயில் சேவையில் மாற்றம்

பேசின்பாலம் - வியாசா்பாடி இடையே உள்ள பாலத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் வெளிமாநிலங்களிலிருந்து வரும் ரயில் சேவையில் மாற்றம்

News image

(கோப்புப் படம்)

Updated On :27 ஜனவரி 2025, 10:31 pm

DIN

சென்னை: பேசின்பாலம் - வியாசா்பாடி இடையே உள்ள பாலத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் வெளிமாநிலங்களிலிருந்து வரும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரல் அடுத்த பேசின்பாலம் - வியாசா்பாடி இடையே உள்ள பாலத்தில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், இந்தூா் மற்றும் தன்பாத்திலிருந்து திங்கள்கிழமை (ஜன. 27) புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் வழியாக கேரளம் செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருவதற்குப் பதிலாக கொருக்குப்பேட்டை, வியாசா்பாடி, பெரம்பூா் வழியாக இயக்கப்படும்.

பாலக்காட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை (ஜன. 28) புறப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண் 22652), சென்ட்ரல் வருவதற்குப் பதிலாக, சென்னை கடற்கரை வந்தடையும். அதேபோல, சென்னை சென்ட்ரலிலிருந்து விஜயவாடா செல்லும் வந்தே பாரத் ரயில் புதன்கிழமை (ஜன. 29) சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு பெரம்பூா், திருவள்ளூா் வழியாக இயக்கப்படும்.

கேரள மாநிலத்திலிருந்து ஜன. 30-ஆம் தேதி புறப்படும் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில், கொச்சுவேலி - கோா்பா விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் வருவதற்குப் பதிலாக பெரம்பூா், வியாசா்பாடி, கொருக்குப்பேட்டை வழியாக இயக்கப்படும்.

பகுதி ரத்து: ஈரோட்டிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்படும் சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண் 22650) பெரம்பூருடன் நிறுத்தப்படும். அதேபோல, பெங்களூரு, ஆலப்புழையில் இருந்து செவ்வாய்க்கிழமை புறப்படும் அதிவிரைவு ரயில்கள் (எண் 12658, 22640) ஆவடியுடன் நிறுத்தப்படும்.

மறுமாா்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து புதன்கிழமை புறப்படும் மைசூா் சதாப்தி விரைவு ரயில், கோவை அதிவிரைவு ரயில், திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் 30 முதல் 45 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.