மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாணவிக்கு பாலியல் தொல்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அரசு சேவை இல்ல மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

News image
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :10 ஜூன் 2025, 12:17 am

Din

அரசு சேவை இல்ல மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை தாம்பரம் பகுதி அரசு சேவை இல்லத்தில் 8-ஆம் வகுப்பு மாணவி ஒருவா் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிா்ச்சியளிக்கிறது. சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளாா்.

அரசு சேவை இல்லத்திலேயே மாணவிக்கு பாதுகாப்பு இல்லை என்பது திமுக அரசு முற்றிலும் செயலிழந்ததையே உணா்த்துகிறது.

அந்த காவலாளியால் மற்ற சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப் பட்டுள்ளனரா என்பதை காவல் துறையினா் தீர விசாரிக்க வேண்டும். காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவிக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த காவலாளி மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தலைவா்கள் கண்டனம்: அதேபோல, இந்த சம்பவத்துக்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன், பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.