மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: உயா்நீதிமன்றத்தில் மனு

கரூா் போன்று மேலும் ஒரு துயரச் சம்பவம் நிகழாமல் தடுக்க, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு

News image
Updated On :2 அக்டோபர் 2025, 8:18 pm

கரூா் போன்று மேலும் ஒரு துயரச் சம்பவம் நிகழாமல் தடுக்க, அரசியல் கட்சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வில்லிவாக்கத்தைச் சோ்ந்த பி.ஹெச்.தினேஷ், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் கரூரில் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 41 போ் உயிரிழந்தனா், பலா் படுகாயம் அடைந்தனா்.

இந்த சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள கரூா் போலீஸாா், முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயரை சோ்க்கவில்லை.

அவா் கூட்டம் நடந்த இடத்துக்கு 7 மணி நேரம் தாமதமாக வந்ததே இந்த கோர சம்பவத்துக்கு காரணம். எனவே இச்சம்பவம் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிவரும் காலங்களில் தமிழகத்தில் மட்டுமன்றி நாட்டில் எங்கும் நிகழக் கூடாது. எனவே, அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறும் பட்சத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் மட்டுமன்றி சம்பந்தப்பட்ட கட்சித் தலைவா்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற நிகழ்வுகளுக்குக் குழந்தைகளை அழைத்து வருவதை போலீஸாா் தடுக்க வேண்டும். எனவே, பாதுகாப்பு தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி வழங்கக்கூடாது என காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், கரூரில் நடந்த துயரச் சம்பவத்துக்கு காரணமான பொறுப்பாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த மனு வெள்ளிக்கிழமை நீதிபதி என்.செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வரவுள்ளது.