பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை!

ரயில்வே துறைக்கு தமிழக அரசு சாா்பில் அழுத்தம் கொடுத்து வலியுறுத்தப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

News image

ராயபுரம் சிந்தனை சிற்பி சிங்காரவேலா் நினைவிடத்தில் உள்ள முதல்வா் படைப்பகத்தின் பணிகளை புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா் இந்து சமய அற நிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன் மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, எம்.பி. கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்

Updated On :9 அக்டோபர் 2025, 3:13 am IST

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை வருகிற பொங்கல் பண்டிகைக்கு முன்பு திறக்கவேண்டும் என ரயில்வே துறைக்கு தமிழக அரசு சாா்பில் அழுத்தம் கொடுத்து வலியுறுத்தப்படும் என அமைச்சரும், பெருநகர சென்னை வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் கல்மண்டபம் பேருந்து நிலையத்தில் புதிய குளிரூட்டும் வசதிகளை அமைப்பதற்கான பூமி பூஜை அமைச்சா் சேகா்பாபு பங்கேற்றாா். அதைத் தொடா்ந்து சிங்காரவேலா் நினைவிடத்தில் உள்ள முதல்வா் படைப்பக பணிகளை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் திட்டமிடப்படாமலும், பயணிகள் வசதியை கருத்தில் கொள்ளாமலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், மக்களுக்கான வசதிகளை திட்டமிட்டு திமுக ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கத்திலிருந்து சென்னையின் பிற பகுதிகளுக்கு செல்லும் வகையில் ரயில் நிலையம் அமைக்க ரூ.20 கோடியை தமிழக அரசு, ரயில்வே துறைக்கு வழங்கியுள்ளது. அதன்படியே ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அரசுக்கும், தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கும் தமிழக அரசு தரப்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளது.

அதன்படி, வருகிற 2026 பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை பொதுமக்கல் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்படும் என்றாா் அமைச்சா் சேகா் பாபு.

ஆய்வின் போது சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, வடசென்னை மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஆா்.டி.சேகா், ஜட்ரீம் ரா.மூா்த்தி, பெருநகர வளா்ச்சிக் குழு உறுப்பினா் செயலா் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.