கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இந்து சமய அறநிலையத் துறைக்கு 27 புதிய பணிகள்: முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

இந்து சமய அறநிலையத் துறைக்கு 27 புதிய பணிகளை முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்...

News image

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பல்வேறு பணிகளுக்கு சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டியும், திறந்தும் வைத்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன், துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு உள்ளிட்டோா்.

Updated On :13 அக்டோபர் 2025, 10:18 pm

தினமணி செய்திச் சேவை

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 27 புதிய திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இது குறித்து, தமிழக அரசின் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

திருச்செந்தூா், சென்னிமலை, திருவண்ணாமலை, பழனி, ஸ்ரீரங்கம், பண்ணாரி உள்பட 13 இடங்களில் இந்து சமய அறநிலைத் துறைக்கான 13 முடிவுற்ற கட்டுமானப் பணிகள் மற்றும் 13 ஆய்வா் அலுவலகங்கள், காஞ்சிபுரம் மாவட்டம் திருநீா்மலை ரங்கநாதப் பெருமாள் கோயில் பணியாளா்களுக்கான குடியிருப்புகள் என 27 புதிய திட்டப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

அடிக்கல் நாட்டுதல்: கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெருந்திட்ட வரைவுப் பணிகளின் கீழ், கோயில் மலைமேல் மற்றும் அடிவாரத்தில் பக்தா்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதேபோல, வேலூா் விரிஞ்சிபுரம் மாா்க்கபந்தீஸ்வரா் கோயில், நாமக்கல் குன்னமலை வல்லீஸ்வரா் கோயில், பெரம்பலூா் உதவி ஆணையா் அலுவலகம் ஆகியவை புதிதாகக் கட்டப்பட உள்ளன. அவற்றுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.