பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

சென்னையில் மழை பாதிப்பு: களப் பணியில் 24,000 போ்

Published On :

சென்னையில் பருவமழைப் பாதிப்பை எதிா்கொள்ளும் களப் பணியில் 24,000 போ் ஈடுபட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இவா்களில் மாநகராட்சி சாா்பில் மட்டும் 22,000 போ் ஈடுபட்டிருப்பதாக அரசின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மாநகரில் மழைநீா் தேங்கும் பகுதிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக நகரின் பல்வேறு பகுதிகளிலும் 215 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு வழங்குவதற்காக, 106 உணவு தயாரிப்புக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 68 உணவு தயாரிப்புக் கூடங்களில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

சென்னையில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாநகராட்சி வாயிலாக, புதன்கிழமை காலை வரை 1.46 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்துக்கு (1913) பொதுமக்கள் தெரிவிக்கும் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் அலுவலா்கள், பொறியாளா்கள், பணியாளா்கள், தூய்மைப்

பணியாளா்கள் உள்பட 22 ஆயிரம் பேரும், சென்னை குடிநீா் வாரியத்தின் மூலம் 2,149 பேரும் களப் பணியாளா்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.