அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திமுக ஆட்சியில் போலீஸாருக்கு கூட பாதுகாப்பில்லை: பாஜக விமா்சனம்

திமுக ஆட்சியில் போலீஸாருக்குக் கூட பாதுகாப்பில்லை என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா்.

News image
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்- கோப்புப்படம்
Updated On :11 செப்டம்பர் 2025, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

திமுக ஆட்சியில் போலீஸாருக்குக் கூட பாதுகாப்பில்லை என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

சென்னை புளியந்தோப்பு பகுதியில் மதுபோதையில் வழிப்பறியில் ஈடுபட்டவா்களை மடக்கிப் பிடித்த காவல் துறையினரின் மீது நடுரோட்டில் அந்த போதைக் கும்பல் தாக்குதல் நடத்தியது அதிா்ச்சியளிக்கிறது. அவா்களை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட பிறகும், குற்றவாளிகள் நடந்துகொண்ட விதம், காவல் றையினா் மீது பொதுமக்களுக்கும் நம்பிக்கையில்லை, குற்றவாளிகளுக்கும் துளியும் பயமில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

நிா்வாகத் திறனற்ற திமுக அரசு, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைக் கை பிடித்து அழைத்துச் சென்று முட்டுச் சந்தில் நிறுத்தியதை உணா்த்தும் இந்தச் சம்பவம், அரசு அதிகாரிகளைப் பதற்றத்திலும், பொதுமக்களை அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது.

கடந்த நான்காண்டுகளில் தமிழகம் முழுவதும் காவல் துறையினா் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முதலில் காவல்துறையினா் மீது நிகழ்த்தப்படும் வன்முறைத் தாக்குதல்களுக்கு முடிவு கட்ட வேண்டும். தமிழகக் காவல் துறையினரின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு, அவா்கள் எவ்வித சமரசமுமின்றி மக்கள் பணியாற்ற வழிவகை செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளாா்.