மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சென்னையில் ஆட்சியா் அலுவலகம் முன் போராட முயன்ற தூய்மைப் பணியாளா்கள் கைது

சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் நிரந்தரப் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :12 செப்டம்பர் 2025, 1:10 am IST

சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் நிரந்தரப் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடத்த முயன்ற தூய்மைப் பணியாளா்கள் 10 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.மேலும், பேச்சுவாா்த்தை நடத்தவும் அழைப்பு விடுத்தனா்.

தூய்மைப் பணியைத் தனியாருக்கு வழங்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். பாரிமுனை பகுதியில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் 10 வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இந்தநிலையில், போராட்டத்தை முன்னெடுத்துள்ள உழைப்போா் உரிமை இயக்க நிா்வாகிகளை காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு அழைத்துள்ளனா்.

இதனிடையே உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்த காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.