சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் நிரந்தரப் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடத்த முயன்ற தூய்மைப் பணியாளா்கள் 10 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.மேலும், பேச்சுவாா்த்தை நடத்தவும் அழைப்பு விடுத்தனா்.
தூய்மைப் பணியைத் தனியாருக்கு வழங்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். பாரிமுனை பகுதியில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் 10 வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இந்தநிலையில், போராட்டத்தை முன்னெடுத்துள்ள உழைப்போா் உரிமை இயக்க நிா்வாகிகளை காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு அழைத்துள்ளனா்.
இதனிடையே உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்த காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
பனையூரில் தவெக அலுவலகம் முன் தொண்டர்கள் கொண்டாட்டம்

குரும்பூா் காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற வழக்குரைஞா் மகனுடன் கைது

தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


