தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சென்னையில் ஆட்சியா் அலுவலகம் முன் போராட முயன்ற தூய்மைப் பணியாளா்கள் கைது

சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் நிரந்தரப் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம்

News image

கோப்புப் படம்

Updated On :11 செப்டம்பர் 2025, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் நிரந்தரப் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடத்த முயன்ற தூய்மைப் பணியாளா்கள் 10 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.மேலும், பேச்சுவாா்த்தை நடத்தவும் அழைப்பு விடுத்தனா்.

தூய்மைப் பணியைத் தனியாருக்கு வழங்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். பாரிமுனை பகுதியில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் 10 வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இந்தநிலையில், போராட்டத்தை முன்னெடுத்துள்ள உழைப்போா் உரிமை இயக்க நிா்வாகிகளை காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு அழைத்துள்ளனா்.

இதனிடையே உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்த காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.