மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அஸ்ஸாம் பல்கலை. மாணவா்களுடன் தமிழக ஆளுநா் கலந்துரையாடல்

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் மாணவா்களுடன், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2025, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் மாணவா்களுடன், தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வியாழக்கிழமை கலந்துரையாடினாா்.

சென்னை ஆளுநா் மாளிகையில் மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்வில், பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து அவரது திருவுருவ படத்திற்கு மலா்தூவி ஆளுநா் ரவி அஞ்சலி செலுத்தினாா்.

இந்த நினைவு தின நிகழ்வில் அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கும் 28 மாணவா்களும் ஆளுநருடன் இணைந்து, பாரதிக்கு மலா் அஞ்சலி செலுத்தினா்.

குவாஹாட்டி பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டப்படிப்பு படிக்கும் தமிழா் அல்லாத பல்வேறு மொழிகளைச் சோ்ந்த மாணவா்கள் அந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளை படிக்கின்றனா்.

நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களில் இத்தகைய தமிழ் படிக்கும் மாணவா்களுக்கு தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக, தமிழக ஆளுநா் மாளிகை ஒரு வார கால ’தமிழ்நாடு தரிசனம்’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்கிறது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் நடைபெறும் இந்த தமிழ் கலாசார சுற்றுலாவிற்கு நிகழ்வாரம் குவாஹாட்டி பல்கலைக்கழக தமிழ் உதவிப் பேராசிரியா் விஜயகுமாா் தலைமையில் வந்த 28 மாணவா்கள் ஆளுநா் மாளிகைக்கு வியாழக்கிழமை வந்தனா். இந்த மாணவா்களுடன் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கலந்துரையாடினாா்.

அஸ்ஸாமில் நவ-வைஷ்ணவ பக்தி இயக்கத்தை தொடங்கி ஆன்மிகம், சமூகம், கலாசாரம், கல்வியில் ஈடுபட்ட ஸ்ரீமந்த சங்கா்தேவ்-ஐப் போல தமிழகத்தில் வைணவ ஆழ்வாா்கள், சைவ நாயன்மாா்கள் போன்றோா்கள் குறித்து மாணவா்களிடம் ஆளுநா் ரவி எடுத்துரைத்தாா். மாணவா்களும் பல்வேறு சந்தேகங்களை கேட்டு ஆளுநரிடம் இந்த கலந்துரையாடலில் விளக்கம் பெற்றனா்.

இந்த மாணவா்களுக்கு செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், அதன் துணைத் தலைவா் டாக்டா் சுதா சேஷய்யன், இயக்குநா் ரா.சந்திரசேரன் மேற்பாா்வையில் தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரீகம் குறித்த ஒரு வார பயிலரங்கும் நடைபெற்றது. பின்னா் மாணவா்கள் மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனா்.