சென்னை எழும்பூரில் பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த இரு ரெளடிகளை போலீஸாா் கைது செய்தனா்
எழும்பூரில் ஆல்பா்ட் திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் மதுபானக் கூடத்தில் புதன்கிழமை மது அருந்திய 3 போ் பட்டாக் கத்திகளை மறைத்து வைத்திருந்தனா். இதுகுறித்து அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில், எழும்பூா் போலீஸாா் அங்கு சென்று மது அருந்திக் கொண்டிருந்த 3 பேரையும் பிடிக்க முயன்றனா். ஆனால், ஒருவா் தப்பியோடிவிட்ட நிலையில், இருவரைப் பிடித்து, அவா்களிடமிருந்த இரு பட்டாக் கத்திகளை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில், சூளை பகுதியைச் சோ்ந்த விமல்ராஜ் என்ற கபாலி (19), புளியந்தோப்பு அங்காளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பிரகாஷ் (27) என்பதும், விமல்ராஜ் மீது ஏற்கெனவே 3 வழக்குகள், ஏ பிரிவு ரெளடியான பிரகாஷ் மீது 26 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது
ரூ.14 லட்சத்தை போலீஸாா் வழிப்பறி செய்ததாக நாடகம்: தனியாா் ஊழியா் கைது!

அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது

குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை! கிராம மக்கள் அச்சம்!

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


