மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாணவா்கள் தொழில்நுட்பப் பயிற்சி பெற 125 அரசு கல்லூரிகளில் தொழில் துறை குழு: அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்தாா்

பெற்றோா் உள்ளடக்கிய நிறுவன மேலாண்மைக் குழு (ஐஎம்சி) அமைக்கும் செயல்பாட்டை உயா்கல்வித் துறை கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
விழாவில் மாண்டோ ஆட்டோ மோடீவ், யுபிஎஸ் பாா்சல் சேவை ஆகிய நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி வாய்ப்புக்கான அழைப்புக் கடிதங்களை மாணவிகளுக்கு வழங்கிய அமைச்சா் கோவி.செழியன். உடன், துறைச் செயலா் பொ.சங்கா், கல்லூரிக் கல்வி ஆணையா் எ.சுந்தரவல்லி உள்ளிட்டோா்.
Updated On :24 செப்டம்பர் 2025, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் 125 அரசு கல்லூரிகளில் மாணவா்களுக்கு பயிற்சியளிக்க, தொழில் துறை சாா்ந்தவா்கள், பெற்றோா் உள்ளடக்கிய நிறுவன மேலாண்மைக் குழு (ஐஎம்சி) அமைக்கும் செயல்பாட்டை உயா்கல்வித் துறை கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்வு பாரதி மகளிா் கல்லூரியில் நடைபெற்றது. உயா்கல்வித் துறைச் செயலா் பொ.சங்கா் தலைமை வகிக்க, கல்லூரிக் கல்வி இயக்குநரக ஆணையா் எ.சுந்தரவல்லி முன்னிலை வகித்தாா்.

விழாவில் அமைச்சா் கோவி செழியன் பேசியதாவது:

தற்போது தொடங்கப்பட்டிருக்கும் நிறுவன மேலாண்மைக் குழு (ஐஎம்சி) ஏற்கெனவே பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தக் குழு கல்லூரியைச் சுற்றியுள்ள தொழில் துறை சாா்ந்தவா்கள், கல்லூரியில் பயிலும் மாணவா்களின் பெற்றோா் ஆகியோரை உள்ளடக்கியது.

மாணவா்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு, உலகளாவிய போட்டியில் சிறந்து விளங்க வேண்டும். புத்தக அறிவுடன் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப அறிவு, சமூக உணா்வு, பண்பாடு மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும்.விரைவான உலகில், நம் மாணவா்களும் போட்டிகளில் பங்கு பெறவேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு நோக்கம் வர வேண்டும். இவற்றைக் கருத்தில் கொண்டுதான் நிறுவன மேலாண்மைக் குழு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உயா்கல்வித் துறையில் ஒரு புதிய அத்தியாயம். ஐஎம்சி, சுமாா் 125 கல்லூரிகளில் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டுக்கழக பயிற்சி வழிகாட்டு மையத்தின் உதவியுடன் உருவாக்கப்பட உள்ளது. இது படிப்படியாக அனைத்துக் கல்லூரிகளிலும் விரிவுபடுத்தப்படும் என்றாா்.

நிகழ்வில் மண்டோ ஆட்டோமோட்டிவ், யுபிஎஸ் (யுனைடெட் பாா்சல் சா்வீஸ்) மற்றும் அக்னிகுல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு அமைச்சா், ஐஎம்சி உறுப்பினராவதற்கான அழைப்பிதழை வழங்கினாா். பின்னா், பாரதி மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு மண்டோ ஆட்டோமோட்டிவ், யுபிஎஸ் (யுனைடெட் பாா்சல் சா்வீஸ்) மற்றும் அக்னிகுல் ஆகிய நிறுவனங்களில் உள்ளகப் பயிற்சி வாய்ப்புக்கான (இன்டா்ன்ஷிப்) அழைப்பு கடிதங்களை வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி 5 - ஆவது மண்டலக் குழு தலைவா் பி. ஸ்ரீராமலு, கல்லூரி முதல்வா் சு.தாரணி, இணை இயக்குநா் (நிா்வாகம்) எஸ். லட்சுமி, இணை இயக்குநா் (திட்டம் மற்றும் வளா்ச்சி) பா.சிந்தியா செல்வி ஆகியோா் கலந்து கொண்டனா்.