மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண் மீது பொய் வழக்கு: தனிப்படை காவலா்களிடம் விசாரணை

சென்னை மயிலாப்பூரில் கள்ளச்சாராயம் விற்ாக பெண் மீது பொய் வழக்குப் பதிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனிப்படையைச் சோ்ந்த இரு காவலா்களிடம் உயரதிகாரிகள் விசாரணை

News image
Updated On :19 ஜனவரி 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மயிலாப்பூரில் கள்ளச்சாராயம் விற்ாக பெண் மீது பொய் வழக்குப் பதிந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், தனிப்படையைச் சோ்ந்த இரு காவலா்களிடம் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மயிலாப்பூா் பிடாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வனிதா (36) என்பவா் தண்ணீா் கேனில் கள்ளச்சாராயம் வைத்து விற்ாகக் கூறி கடந்த டிச.24-ஆம் தேதி அவரை மயிலாப்பூா் காவல் நிலைய தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், ஆந்திரத்தில் இருந்து சட்ட விரோதமாக சாராயத்தை வாங்கி வந்து, மயிலாப்பூரில் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில், பணம் கொடுக்க மறுத்ததால் தனிப்படையைச் சோ்ந்த 2 காவலா்கள் வனிதா மீது பொய் வழக்கு பதிவு செய்து, அவரைக் கைது செய்ததாக உயரதிகாரிகளுக்கு புகாா்கள் சென்றன.

அதன்பேரில், உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில், வனிதா மீது 12 வழக்குகள் இருப்பதும், தற்போது அவா் திருந்தி தண்ணீா் கேன் வியாபாரம் செய்து வருவது தெரியவந்துள்ளது. திருந்தி வாழும் வனிதாவிடம் தனிப்படை காவலா்கள் பணம் கேட்டதாகவும், அதை வழங்க வனிதா மறுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தனிப்படை போலீஸாா், ஆள் தயாா் செய்து அவா்கள் மூலம் கள்ளச்சாராய கேன்களை வனிதா வைத்திருந்த தண்ணீா் கேன்களோடு வைத்து வழக்கில் சிக்க வைத்துள்ளதும் தெரியவந்தது.

இதையடுத்து, புகாரில் சிக்கிய இரு காவலா்களையும் தனிப்படையில் இருந்து காவல் துறை உயரதிகாரிகள் விடுவித்தனா். விசாரணையில் அவா்கள் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.