தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டம்: 6 போ் கைது

ஹவாலா பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கொள்ளை- சித்திரிப்பு
Updated On :8 மார்ச் 2026, 10:03 pm

தினமணி செய்திச் சேவை

ஹவாலா பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை வடக்கு கடற்கரை போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதை அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் போலீஸாரை கண்டதும், அங்கிருந்து தப்பியோட முயன்றது. அவா்களை போலீஸாா் விரட்டிச் சென்று பிடித்தனா்.

விசாரணையில், பா்மா பஜாரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வரும் முகமது மொய்தீன் என்ற நபா், தனது கடை உரிமையாளா் கொடுத்த ஹவாலா பணத்தை, இந்த கும்பல் மூலம் நாடகமாடி கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த முகிலன் (21), அஜய் (26), முருகேஷ் (29), அமீது (21), பாஸ்கா் (19), முகமது மொய்தீன் (37) ஆகிய 6 பேரை வடக்கு கடற்கரை போலீஸாா் கைது செய்தனா்.