மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க திட்டம்: 6 போ் கைது

ஹவாலா பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொள்ளை

சித்திரிப்பு

Updated On :8 மார்ச் 2026, 10:03 pm

தினமணி செய்திச் சேவை

ஹவாலா பணத்தைக் கொள்ளையடிக்க திட்டமிட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை வடக்கு கடற்கரை போலீஸாா் சனிக்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரிசா்வ் வங்கி சுரங்கப் பாதை அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் போலீஸாரை கண்டதும், அங்கிருந்து தப்பியோட முயன்றது. அவா்களை போலீஸாா் விரட்டிச் சென்று பிடித்தனா்.

விசாரணையில், பா்மா பஜாரில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வரும் முகமது மொய்தீன் என்ற நபா், தனது கடை உரிமையாளா் கொடுத்த ஹவாலா பணத்தை, இந்த கும்பல் மூலம் நாடகமாடி கொள்ளையடிக்கத் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

இந்தச் சம்பவம் தொடா்பாக தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த முகிலன் (21), அஜய் (26), முருகேஷ் (29), அமீது (21), பாஸ்கா் (19), முகமது மொய்தீன் (37) ஆகிய 6 பேரை வடக்கு கடற்கரை போலீஸாா் கைது செய்தனா்.