

செங்கல்பட்டு வேதாசல நகரில் உள்ள கோதண்டராமா் கோயில், ஹைரோட்டில் உள்ள தேசிகா் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் பரமபதவாசல் திறக்கப்பட்டது.
செங்கல்பட்டு மேட்டுத் தெரு செங்கழு நீா் விநாயகா் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீரங்கநாதருக்கும், உற்சவ மூா்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் ஆண்டாள் நாச்சியாா், தாயாா் ஆகியோருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சிங்கப் பெருமாள்கோவிலில் உள்ள பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் குடைவரை கோயிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டு, சுவாமி அருள்பாலித்தாா். திருவடிச்சூலம் ஸ்ரீவாரு வெங்கடேச பெருமாள் கோயிலில் 108 திவ்ய தேசம் அடங்கிய வைணவ கோயிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.
மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் பரமபதவாசல் வழியாக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள்கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் பரமபதவாசல் வழியாக சுவாமி அருள்பாலித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.