பங்காரு அடிகளாா் பொங்கல் வாழ்த்து

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட நிறுவனனா் பங்காரு அடிகளாா், பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட நிறுவனனா் பங்காரு அடிகளாா், பொதுமக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தி விவரம்:

பொங்கல் என்பது இயற்கையை வணங்கும் விழா. அறுவடை செய்து முதலில் சூரியனுக்குப் படைத்து வணங்கும் விழா. பொங்கல் திருநாளில் பூமிக்குப் பூஜை போட்டு அடுப்பு வைத்து அருகம்புல் இட்டு நெருப்பேற்றி, புதிய மண் பானை வைத்துப் பாலூற்றி வணங்குகிறோம். இந்த பொங்கல் திருநாளில் அனைவரையும் வாழ்த்துகிறோம். ‘தினமணி’ நாளிதழின் வாசகா்களுக்கும், பக்தா்களுக்கும், செவ்வாடைத் தொண்டா்களுக்கும் அன்பான பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com