ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பாடலாத்ரி நரஸிம்ம ஸ்வாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம்

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரஸிம்ம ஸ்வாமி  கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தில் 7ஆம் நாள் வியாழக்கிழமை தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

News image
Updated On :9 ஜூன் 2022, 7:29 am

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயில் பாடலாத்ரி நரஸிம்ம ஸ்வாமி  கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தில் 7ஆம் நாள் வியாழக்கிழமை தேர்த் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீ பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. 

இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் நரசிம்மசுவாமி உக்கிரத்துடனும் முக்கண்ணுடனும் அமர்ந்த கோலத்தில் நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் அருளும் சுவாமியாக அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார். இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெறும்.

துவாஜரோஹணம், புண்ணியகோடி விமானம் கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில் 7ஆம் நாளாகிய   வியாழக்கிழமை தேர் திருவிழா  நடைபெற்றது.

தேரோட்ட விழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. இதேபோன்ற உற்சவ மூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதனையடுத்து உற்சவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்த தேரில் பெருமாள் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். தேர் கோயிலில் இருந்து புறப்பட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக மாடவீதிகளை வலம் வந்தேன் தேர் நிலையில் நின்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேரோட்டம் நடந்த பாதைகள் எல்லாம் ஆன்மீக பக்தர்கள் அன்னதானம் நீர் மோர் குளிர்பானம் ஆகியவைகளை வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் வெங்கடேசன், கோயில் பணியாளர்கள் பட்டாச்சாரியார்கள் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.