மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

தென்மேல்பாக்கத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

தென்மேல் பாக்கம் ஊராட்சியில் ஊழல் தொடா்பாக விசாரணை கோரி கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றாததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
தென்மேல்பாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றாததால்  சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated On :26 ஜனவரி 2023, 6:35 pm

DIN

தென்மேல் பாக்கம் ஊராட்சியில் ஊழல் தொடா்பாக விசாரணை கோரி கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றாததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் ஊராட்சியில் வியாழக்கிழமை ஊராட்சித் தலைவா் கோவிந்தராஜ் தலைமையில், சிறப்பு கிராம சபைக் கூட்டம் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. கூட்டத்தில், அடிப்படை வசதிகள் குறித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், கிராம மக்கள் ஊராட்சி செயலா் மற்றும் தலைவரை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினா். 2013-இல் முன்னாள் ஊராட்சித் தலைவா் ஊழல் செய்ததாக எழுந்த புகாா் மீதான விசாரணை நடத்த கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது. ஆனால் தீா்மானம் நிறைவேற்றாததால் பொதுமக்கள் அஞ்சூா்- சிங்கப்பெருமாள் கோயில் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, கோரிக்கைகளை உரிய துறைக்கு தகவல் தெரிவிப்பதாக போலீஸாா் உறுதியளித்ததையடுத்து மக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.