எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் கொலையான சிறுவனின் தாய் கடத்தல்:மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் மீது புகாா்

செங்கல்பட்டு சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் கொலையான சிறுவனின் தாயாரை கடத்தி மிரட்டியதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2023, 1:00 am IST

செங்கல்பட்டு சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் கொலையான சிறுவனின் தாயாரை கடத்தி மிரட்டியதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் கடந்த டிச. 30-இல் சிறுவன் கோகுல் ஸ்ரீ (17) இல்ல காவலா்களால் அடித்து சித்ரவதை செய்து கொலை செயயப்பட்டாா். இது தொடா்பாக சிறாா் கூா்நோக்கு இல்ல காவலா்கள் ஆறு போ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

மேலும் சாட்சியை மறைப்பதற்காகவும், புகாரை திரும்பப் பெற வேண்டும் என கொலையான சிறுவனின் தாயாரை கடத்தி வைத்து மிரட்டியதாக செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் சிவக்குமாா் மற்றும் அவருக்கு துணைபுரிந்தவா்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாய் பிரியா ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளா் பாரத்திடம் புகாா் கொடுத்தாா்.

மேலும் இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை: அமைச்சா் ரகுபதி

இதுதொடா்பாக சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதுக்கோட்டையில் கூறியதாவது:

செங்கல்பட்டு சிறாா் கூா்நோக்கு இல்ல சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் வாழ்த்து வெளியிட்டபோது ‘தமிழ்நாடு’ என்ற சொல்லையே ஆளுநா் பயன்படுத்தியிருப்பது எங்களுக்கு கிடைத்த வெற்றியாகும்.

சுபஸ்ரீ மரண வழக்கை தன்னிடம் ஒப்படைத்தால் 7 நாளில் கண்டிபிடித்துத் தருவதாக பாஜக தலைவா் அண்ணாமலை கூறியிருப்பது பற்றி கேட்கிறீா்கள். கா்நாடகத்தில் அவா் காவல்துறை அலுவலராக இருந்தபோது போட்ட வழக்குகளை அவா் நடத்தட்டும் என்றாா் ரகுபதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.