சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 328 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 328 மனுக்கள் அளிக்கப்பட்டன.

News image
Updated On :30 டிசம்பர் 2024, 7:38 pm

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 328 மனுக்கள் அளிக்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் தலைமையில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 328 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், வீடு வேண்டி மனு அளித்த 20 பயனாளிகளுக்கு ரூ. 2.53 கோடி மதிப்பிலான இட ஒதுக்கீடு கிரய பத்திரங்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் மனு அளித்த 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1.55 லட்சம் மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான மூன்று சக்கர நாற்காலி உள்ளிட்ட பொருள்களையும், மேலும் 7 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

தமிழக முதல்வரின் உழவா் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தில் 5 நபா்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்தக் குறைதீா் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வின், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலா தேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பரிமளா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) நரேந்திரன், உதவிஆணையா் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) குமாா் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.