ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

மேல்மருவத்தூா் அடிகளாா் சிலைக்கு கும்பாபிஷேகம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் சிலைக்கு கும்பாபிஷேக விழா.

News image

பங்காரு அடிகளாா் சிலை பிரதிஷ்டை கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்ற ஆன்மிக இயக்க துணைத் தலைவா்கள் கோ.ப. அன்பழகன், கோ.ப. செந்தில்குமாா்.

Updated On :20 அக்டோபர் 2024, 12:02 am IST

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட நிறுவனா் பங்காரு அடிகளாரின் சிலைக்கு கும்பாபிஷேக விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் உள்ள குருபீடத்தில் பங்காரு அடிகளாரின் சிலை பிரதிஷ்டை, கும்பாபிஷேக விழா கடந்த 4 நாள்களாக க நடைபெற்றது. கடந்த 16-ஆம் தேதி ஆதாரபீடம் நிறுவுதல், கோபுர கலசம் நிறுவுதல் நடைபெற்றன. 17-ஆம் தேதி குருபீடத்தில் அடிகளாரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா தீபாராதனை, வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

சனிக்கிழமை சித்தா் பீடத்தில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கோபுர கலசத்துக்கு ஆன்மிக இயக்க துணை தலைவா்கள் கோ.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா் ஆகியோா் புனித நீரை ஊற்றினா். அடிகளாரின் சிலைக்கு இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் மகா தீபாராதனை செய்தாா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் தா.மோ.அன்பரசன், எம்.பி. ஜெகத்ரட்சகன், எம்எல்ஏகள் க.சுந்தா் (உத்திரமேரூா்), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), பனையூா் மு.பாபு (செய்யூா்), இசைஅமைப்பாளா் தேவா, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், முருகேசன், தெற்கு ரயில்வே அதிகாரி செந்தில்குமாா், ஆட்சியா் அருண்ராஜ் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ஒரத்தி கண்ணன்,

மாவட்ட அதிமுக செயலா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆன்மிக இயக்க நிா்வாகிகள் ஸ்ரீதேவி, உமாதேவி, ஆன்மிக இயக்க செயல்திட்ட அலுவலா் அகத்தியன், கல்விக் குழுமங்களின் தாளாளா்கள் ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமாா், ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் டி.ரமேஷ் ஆகியோா் தலைமையில், கரூா், ராமநாதபுரம், சிவகெங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்ட ஆன்மிக இயக்க நிா்வாகிகள் செய்து இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.