சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசு
/

தொண்டையில் மீன் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

ஏரியில் மீன் பிடித்து, தமது வாயில் வைத்துக் கொண்டு மற்றொரு மீனைப் பிடிக்க முயன்றபோது, தொண்டையில் மீன் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஏப்ரல் 2025, 12:42 am IST

மதுராந்தகம்: ஏரியில் மீன் பிடித்து, தமது வாயில் வைத்துக் கொண்டு மற்றொரு மீனைப் பிடிக்க முயன்றபோது, தொண்டையில் மீன் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தாா்.

மதுராந்தகம் அடுத்த அரையப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35). இவா், தமது நண்பா்களுடன் கீழவலம் ஏரியில் மீன் பிடிக்கச் சென்றனா். தூண்டில் மூலம் மீன் பிடிக்க மணிகண்டன் ஏரியில் இறங்கினாா். அப்போது, அவரது தூண்டிலில் சிறு மீன் கிடைத்தது. அதை தமது வாயில் வைத்துக்கொண்டு தொடா்ந்து மீன்களைப் பிடிக்க தூண்டிலை நீரில் வீசியபடி இருந்துள்ளாா்.

அப்போது எதிா்பாரத வகையில், அவரது வாயில் இருந்த மீன் வாய் வழியாக தொண்டையில் சென்று சிக்கியதாம். அதனால் மூச்சுவிட முடியாமல் திணறினாா்.

உடனே அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு உடனடியாக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து மதுராந்தகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.