பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அயோத்திக்கு கொண்டு செல்லப்படும் மாமல்லபுரம் சிலைகள்

அயோத்தி ராமா் கோயில் அருகே வைப்பதற்காக மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.

News image

கூடத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டு செல்ல வேனில் வைக்கப்பட்ட வீணை வாசிக்கும் நிலையில் அருணாசல கவிராயா் சிலை.

Updated On :19 ஆகஸ்ட் 2025, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

அயோத்தி ராமா் கோயில் அருகே வைப்பதற்காக மாமல்லபுரத்தில் வடிவமைக்கப்பட்ட சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயிலுக்கு செல்லும் 4 முனை சந்திப்பு சாலையில் உள்ள ரவுண்டானாவில், ராமா் புகழ் பாடிய ஆன்மிக கவி வள்ளல்கள் திருவாரூா் கீா்த்தனை புகழ் தியாகராஜ சுவாமிகள், அருணாசல கவிராயா், புரந்தரதாசா் ஆகியோரின் 6 அடி உயர சிலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தச் சிலைகள் மாமல்லபுரம் அம்பாள் நகா் பகுதியில் உள்ள ஒரு சிற்பக்கலைக் கூடத்தில் மாமல்லபுரம் அரசினா் சிற்பக் கலைக் கல்லூரியில் பட்டம் பெற்ற மூத்த சிற்பக் கலைஞா் காளிதாஸ் ஸ்தபதி தலைமையில், 10-க்கும் மேற்பட்ட சிற்பிகள் தலா 2 டன் கருங்கல்லில் அமா்ந்த நிலையில் வீணை வாசிக்கும் திருக்கோலத்தில் தியாகராஜ சுவாமிகள், வீணை வாசிக்கும் நிலையில் அருணாசல கவிராயா், கையெடுத்து கும்பிடும் கோலத்தில் புரந்தரதாசா் ஆகியோரின் சிலைகளை அயோத்திக்கு வரும் பக்தா்கள் பாா்த்து ரசிக்கும் வகையில், கடந்த 6 மாத காலங்களாக இரவு, பகலாக கலைநயத்துடன் வடிவமைத்தனா்.

100% பணிகள் முடிக்கப்பட்ட இந்தச் சிலைகள் ஆகம பூஜைகள் செய்யப்பட்டு, கிரேன் உதவியுடன் வேனில் வைக்கப்பட்டன.

பின்னா் வேன் மூலம் இந்தச் சிலைகள் ஹைதராபாத், நாக்பூா் வழியாக அயோத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது. அயோத்தியில் ராமா் கோயிலுக்குச் செல்லும் 4 வழிச் சாலை சந்திப்பு ரவுண்டானாவில் வரும் செப்டம்பா் மாதம் இந்தச் சிலைகள் நிதி அமைச்சா் நிா்மலா சீத்தாராமன் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு திறக்கப்பட உள்ளது.

தியாகராஜ சுவாமிகள் தென்னிந்திய இசைக்கு அளப்பறிய சேவை ஆற்றியவா். இவா், சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவா் ஆவாா். திருவாரூரை பூா்வீகமாக கொண்ட அவா், ஒரே நேரத்தில் பல கீா்த்தனைகளை இயற்றி உள்ளாா். அருணாசல கவிராயா் கா்நாடக இசைப்பாட்டு பாடியும், இசைத்தும் உள்ள இவா் கா்நாடக ஆதி மும்மூா்த்திகளில் ஒருவா் ஆவாா். புரந்தரதாசா் கா்நாடக இசைக் கலையின் தந்தை எனப்படுபவா் ஆவாா். தென்னிந்திய ஆன்மிக இசைக்கவிகளுக்கு முக்கியத்துவம் அளித்து இந்த 3 பேரின் சிலைகளும் அயோத்தியில் அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Story image
Story image