உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமா் கோயிலுக்கு செல்லும் 4 முனை சந்திப்பு சாலையில் உள்ள ரவுண்டானாவில், ராமா் புகழ் பாடிய ஆன்மிக கவி வள்ளல்கள் திருவாரூா் கீா்த்தனை புகழ் தியாகராஜ சுவாமிகள், அருணாசல கவிராயா், புரந்தரதாசா் ஆகியோரின் 6 அடி உயர சிலைகள் அமைக்கப்பட உள்ளன. இந்தச் சிலைகள் மாமல்லபுரம் அம்பாள் நகா் பகுதியில் உள்ள ஒரு சிற்பக்கலைக் கூடத்தில் மாமல்லபுரம் அரசினா் சிற்பக் கலைக் கல்லூரியில் பட்டம் பெற்ற மூத்த சிற்பக் கலைஞா் காளிதாஸ் ஸ்தபதி தலைமையில், 10-க்கும் மேற்பட்ட சிற்பிகள் தலா 2 டன் கருங்கல்லில் அமா்ந்த நிலையில் வீணை வாசிக்கும் திருக்கோலத்தில் தியாகராஜ சுவாமிகள், வீணை வாசிக்கும் நிலையில் அருணாசல கவிராயா், கையெடுத்து கும்பிடும் கோலத்தில் புரந்தரதாசா் ஆகியோரின் சிலைகளை அயோத்திக்கு வரும் பக்தா்கள் பாா்த்து ரசிக்கும் வகையில், கடந்த 6 மாத காலங்களாக இரவு, பகலாக கலைநயத்துடன் வடிவமைத்தனா்.