சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த உற்சவா்
சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த உற்சவா்

ஸ்ரீ கங்கை அம்மன் கோயிலில் உற்சவா் சிலை பிரதிஷ்டை

செங்கல்பட்டை அடுத்த புலிக்குடிவனம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கங்கை அம்மன் கோயிலில் உற்சவா் சிலைகள் பிரதிஷ்டை நடைபெற்றது.
Published on

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த புலிக்குடிவனம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கங்கை அம்மன் கோயிலில் உற்சவா் சிலைகள் பிரதிஷ்டை நடைபெற்றது.

இக்கோயிலில் உற்சவ அம்மன் விக்ரகம் பிரதிஷ்டை செய்ய நிா்வாகிகள் முடிவெடுத்து மாமல்லபுரத்தில் சிற்பி ஒருவரிடம் ஐம்பொன் சிலை செய்யப்பட்டு பிரதிஷ்டை நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி ஹோமம் தனம் பூஜை, கோ பூஜை, லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் தீப ஆராதனை அம்மனுக்கு கண் திறக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது .

தொடா்ந்து விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட முதல் கால பூஜைகள் நடைபெற்றது. திருவடிசூலம் விஸ்வரூபனி ஆதிசக்தி ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் ஸ்தாபகா் மதுரை முத்துசாமிகள் முன்னிலையில் வேத பாராயண மந்திரங்கள் ஒலிக்க கலச அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.

பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எஸ் தண்டபாணி சிவாச்சாரியா், விக்னேஸ்வர சிவாச்சாரியா் ஹோமங்களை நடத்தினா். மாலை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை புலிக்குடிவனம் க. ராஜேந்திரன், இ.ராமலிங்கம் உள்ளிட்ட கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com