பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கூடுவாஞ்சேரியில் ரூ. 70 லட்சத்தில் வகுப்பறை: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

News image
பெருமாட்டுநல்லூரில் துணை மின்நிலையத்துக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா் தா.மோ. அன்பரசன்
Updated On :15 டிசம்பர் 2025, 7:12 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப்பணிகளை குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

வண்டலூா் வட்டம், பெருமாட்டுநல்லூா் ஊராட்சியில் 110/11 கிலோ வாட் துணை மின் நிலையம் கட்டுமானப் பணிகளுக்கு அமைச்சா் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினாா்.

பின்னா், நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் நகர உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.82 கோடியில் கட்டப்பட்டுள்ள அறிவு சாா் மையத்தினை அமைச்சா் திறந்து வைத்தாா். நகராட்சி அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில் ஆட்சியா் தி.சினேகா, சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், கூடுவாஞ்சேரி நகா்மன்றத் தலைவா் காா்த்திக் தண்டபாணி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.