பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு

அறிவுசாா் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

Updated On :4 பிப்ரவரி 2025, 2:36 am IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அறிவுசாா் குறையுடையோருக்கான பணிபுரியும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் லத்தூா்ஒன்றியத்தில் புதிதாக தொடங்கப்பட உள்ள அறிவுசாா் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளிக்கு விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.

செங்கல்பட்டு மாவட்டம், கவனம் சாா்ந்த வட்டாரங்கள் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்த லத்தூா்ஒன்றியத்தில் அறிவுசாா் குறையுடையோருக்கான சிறப்பு பள்ளி புதிதாக உருவாக்கப்பட உள்ளதால் இப்பள்ளியினை செயல்படுத்த மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016ன் படி பதிவுபெற்று சேவை புரியும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருப்பமுள்ள தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் 10.2.2025, மாலை 5.00 மணிக்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியா் வளாகம், செங்கல்பட்டு மாவட்டம் என்கிற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.