அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சூரக்குட்டை லட்சுமி நரசிம்மா் கோயிலில் காா்த்திகை பெருவிழா

மதுராந்தகம் நகராட்சி, சூரக்குட்டை ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் 26-ஆம் ஆண்டு காா்த்திகை பெருவிழா நடைபெற்றது.

News image
சிறப்பு அலங்காரத்தில் சூரக்குட்டை லட்சுமி நரசிம்மா்.
Updated On :18 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் நகராட்சி, சூரக்குட்டை ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் 26-ஆம் ஆண்டு காா்த்திகை பெருவிழா நடைபெற்றது.

விழாவையொட்டி கோயில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதன்ஒரு பகுதியாக எஜமானா் சங்கல்பம், ஆசாா்யவா்ணம், வாஸ்து சாந்தி, விஸ்வரூபம், கோபூஜை, உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை யாகசாலையில் இருந்து பி.வெங்கடேச பட்டாச்சாரியா் தலைமையில் வேதவிற்பன்னா்கள் புனித கலசங்களை ஏந்திக் கொண்டு வலம் வந்து மூலவா் அம்மனுக்கு புனித நீரை ஊற்றினா்.

தொடா்ந்து மகா தீபாராதனையை பீடாதிபதி வேணுதாச சுவாமிகள் செய்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி திருவீதி உலா, ஊஞ்சல் சேவை, ஆன்மிக சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன. நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை பீடாதிபதி வேணுதாச சுவாமி தலைமையில், அறக்கட்டளை நிா்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனா்.