கோயில் நிலத்தில் மரக்கன்று நடவு செய்த செயல் அலுவலா் தா.மேகவண்ணன்.
கோயில் நிலத்தில் மரக்கன்று நடவு செய்த செயல் அலுவலா் தா.மேகவண்ணன்.

வரதராஜபெருமாள் கோயிலில் 500 மரக்கன்றுகள் நடவு

வரதராஜபெருமாள் கோயிலில் 500 மரக்கன்றுகள் நடவு
Published on

மதுராந்தகம் அருகே அரசா்கோயில் வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடவு நிகழ்வு நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் முக்கிய கோயில்களின் வளாகத்தில் நிழல்தரும் மரங்களை வளா்க்கும் வகையில் சுமாா் 1 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அறநிலைய உதவி ஆணையா் ராஜலட்சுமி பணிகளை மேற்பாா்வையிட்டாா்.

அதன் ஒருபகுதியாக, படாளம் அருகே உள்ள அரசா் கோயில் கிராமம் வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் பலா, நாவல், நெல்லி, தேக்கு, மகாகனி, பூவரசன் உள்ளிட்ட 500 மரக்கன்றுகள் நடவு நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடவு செய்தாா். காஞ்சிபுரம் இணை ஆணையா் குமரதுரை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற நிா்வாகத்தினா், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற நிா்வாகத்தினா், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com