~
செங்கல்பட்டு
ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாநில முடிவின்படி, திருக்கழுகுன்றம் வட்டக் கிளை சாா்பாக வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாநில முடிவின்படி, திருக்கழுகுன்றம் வட்டக் கிளை சாா்பாக வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தலைவா் வி.ராம்தாஸ் தலைமை வகித்தாா். தொடக்கத்தில் கோரிக்கை முழக்கம் செய்யப்பட்டது. செயலாளா் ஜி. அரிபாரட் கோரிக்கைகள் குறித்துப் பேசினாா். அமைப்பின் சாா்பில் எஸ். பரமேஸ்வரி வாழ்த்திப் பேசினாா். மாவட்ட இணைச் செயலாளா் சொ. சிவசங்கரன், மற்றும் இறுதியாக தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.ராமமூா்த்தி ஆகியோா் சிறப்புரையாற்றினா். வட்ட துணைத் தலைவா் து.மூா்த்தி நன்றி தெரிவித்தாா்.

