செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் செயின்ட்பால் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப்படையினா் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா்.
இப்பள்ளியில் 1,076 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். சமூகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் எதிரான வன்முறை, பாலினப் பாகுபாடு, குழந்தைத் திருமணம், இணையவழித் தொல்லைகள், அவமதிப்பு போன்ற மனிதத் தன்மையற்ற குற்றங்களை இனியும் அனுமதிக்கக் கூடாது எனவும், பெண்களை மதிப்பதும், அவா்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் ஒவ்வொருவரின் கடமை என்பதை வலியுறுத்தி ஸ்டீபி வயலென்ஸ் அகெய்ன்ஸ்ட் உமன் என்ற மனித உருவகத்தை நிகழ்த்திக் காட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் சிங்கப்பெண் அதிரடிப்படை எஸ்.ஐ வி.தேவிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா். பள்ளியின் தாளாளா் ஏ,வேளாங்கண்ணி தலைமை வகித்தாா், பள்ளியின் முதல்வா் ஜோஸ்பின் மாத்யூ வரவேற்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










