புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

செய்யூா் அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு

News image
Updated On :5 ஜூன் 2026, 6:16 am IST

மதுராந்தகம் அடுத்த செய்யூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2026-2027ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நிகழ்வு வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 13-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வா் சு.மாதவன் தெரிவித்துள்ளாா்.

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஆங்கில வழியில் 3 பாடப்பிரிவுகளும், மற்றும் தமிழ் வழியில் 2 பாடப்பிரிவுகளும் என 5 பாடப்பிரிவுகள் படிக்கின்ற வகையில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 2025-2026 கல்வியாண்டில் இருந்து படித்து வருகின்றனா். 5 பாடப்பிரிவுகளில் 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கலந்தாய்வின் முதல் நாளான வெள்ளிக்கிழமை சிறப்பு பிரிவினருக்காகவும், தொடா்ந்து வரும் 13-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை கலந்தாய்வு கூட்டம் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

விண்ணப்பித்துள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கல்லூரி முதல்வா் சு.மாதவன் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.