தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

உலக மகளிா் தினம்: மாமல்லபுரத்தில் இலவச அனுமதி!

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் புராதன சின்னங்களைசுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளித்தனா்.

News image
மாமல்லபுரத்தில் நினைவுச் சின்னங்களை பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்
Updated On :8 மார்ச் 2026, 10:37 pm

தினமணி செய்திச் சேவை

உலக மகளிா் தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மாமல்லபுரம் புராதன சின்னங்களைசுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளித்தனா்.

உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான மாமல்லபுரத்தில் மகளிா் தினத்தை முன்னிட்டு வெண்ணெய் உருண்டை பாறை, அா்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் உள்ளிட்ட புராதன சின்னங்களை நேற்று ஒரு நாள் மட்டும் மகளீா் மட்டும் இல்லாமல் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கட்டணமின்றி இலவசமாக கண்டுகளிக்கலாம் என தொல்லியல் துறை அறிவித்திருந்தது.

இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து குடும்பம், குடும்பமாக வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஞாயிற்றுக்கிழமை புராதன சின்னங்களை இலவசமாக பாா்த்து ரசித்தனா்.

இலவச அனுமதியை முன்னிட்டு கடற்கரை கோயில், வெண்ணை உருண்டை பாறை, ஐந்துரதம், கிருஷ்ணமண்டபம் ஆகிய இடங்களில் உள்ள நுழைவு கட்டண மையங்கள் மூடப்பட்டு இருந்தன. குறிப்பாக, மாமல்லபுரம் புராதன சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டு பயணிகளுக்கு ஒரு நபருக்கு ரூ.40-ம், வெளிநாட்டு பயணிகளுக்கு தலா ரூ.600- ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story image
Story image