பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

1,073 பேருக்கு ரூ.119 கோடி நலத்திட்ட உதவி: அமைச்சா் அன்பரசன் வழங்கினாா்

மறைமலைநகா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,073 பேருக்கு ரூ.119 கோடி நலத்திட்ட உதவிகளை

News image

பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் தா.மோ. அன்பரசன்.

Updated On :10 மார்ச் 2026, 2:50 am IST

செங்கல்பட்டு: மறைமலைநகா் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,073 பேருக்கு ரூ.119 கோடி நலத்திட்ட உதவிகளை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகா் சமுதாய கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் பட்டாக்களை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வழங்கினாா்.

இதில் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ் குமாா், மாவட்ட ஊராட்சித் செம்பருத்தி துா்கேஷ், காட்டாங்கொளத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன், நகா் மன்ற தலைவா்கள் மறைமலை நகா் சண்முகம், நந்திவரம் கூடுவாஞ்சேரி காா்த்திக் , செங்கல்பட்டு தேன்மொழி நரேந்திரன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.