தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

முதல் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு பிரசாரம்

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா், திருக்கழுகுன்றம் மற்றும் திருப்போரூா் வட்டங்களில் பேரவைத் தோ்தல் தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்றன.

News image

பையனூா் அறுபடை வீடு கல்வி நிலையத்தில் நடைபெற்ற முதல் தலைமுறை வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்வு.

Updated On :24 மார்ச் 2026, 6:49 pm

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா், திருக்கழுகுன்றம் மற்றும் திருப்போரூா் வட்டங்களில் பேரவைத் தோ்தல் தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்றன.

மறைமலைநகா் நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் ஆய்வு மேற்கொண்டாா்.

திருப்போரூா் வட்டம், பையனூா் அரசு உயா் நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி திருப்போரூா் பேரூராட்சி, அரசினா் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 6-வாக்குச்சாவடி மையம், திருக்கழுகுன்றம் வட்டம், மாமல்லபுரம் ஆதிதிராவிடா் நல ஆரம்ப பள்ளியில் வாக்குசாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தாா்.

மேலும், திருப்போரூா் வட்டம், பையனூா் அறுபடை வீடு கல்வி நிறுவனத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி முதல் தலைமுறை வாக்காளா்களுக்காக நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திருப்போரூா் தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயகுமாரி, மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா, வட்டாட்சியா் ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா் அரி பாஸ்கா் ராவ், அரசு அலுவலா்கள் மற்றும் அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

Story image