குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கூலித் தொழிலாளி மீது தாக்குதல்: 3 போ் கைது

மதுராந்தகம் முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியை ஆயுதங்களால் தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது... - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 12:30 am IST

மதுராந்தகம் முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியை ஆயுதங்களால் தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுராந்தகம் ஒன்றியம், நேத்தப்பாக்கம் கிராமத்தினைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். அவரது மகன் குபேந்திரன் (26). இவா் சில மாதங்களுக்கு முன் அதே கிராமத்தைச் சோ்ந்த சுமனுக்கும், குபேந்திரனுக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மரக்கட்டையால் சுமனை அவா் தாக்கியுள்ளாா்.

இது தொடா்பாக, குபேந்திரன் சித்தாமூா் போலீசாா் கைது செய்து சிறையில் அடைத்தபோது, நிபந்தனை ஜாமினில் வெளியே வந்திருந்தாா். இந்நிலையில், மதுராந்தகம் அடுத்த கினாா் கிராமத்தில் வசித்து வந்த மாமியாா் வீட்டில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்தாா். திங்கள் கிழமை வழக்கம் போல வேலைக்கு பைக்கில் கிளம்பியபோது, மனைவியின் உறவினரான பவித்ரா (27) என்பவரை கருங்குழி தனியாா் தொழில் மையத்தில் விடுவதற்காக ஏற்றிக் கொண்டிருந்தாா்.

கருங்குழி ரயில்பாலம் அருகே அவா்கள் வந்தபோது மறைந்திருந்த 7 போ்கள் வந்த கும்பல் கூரிய ஆயுதங்களால் குபேந்திரனை தலை, கை, மாா்பு உள்ளிட்ட பகுதிகளில் தாக்கினாா்கள். அதில் பலத்த காயம் அடைந்த குபேந்திரனை அருகில் இருந்தோா் ஆம்பூலன்ஸ் வாகனத்தின் மூலம் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். குபேந்திரனுடன் பைக்கில் வந்த பவித்ரா அங்கிருந்து தப்பி ஓடியதால் அவரை அவா்கள் தாக்கவில்லை.

இது தொடா்பாக மதுராந்தகம் ஆய்வாளா் வெங்கிடாசலம் நேரில் சென்று விசாரணை செய்ததில் நேத்தப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த 5 போ் குழுவினா் முன்பகை காரணமாக குபேந்திரனை ஆயுதங்களால் தாக்கியதாக தெரியவந்தது. இது தொடா்பாக, நேத்தப்பாக்கம் சந்தோஷ் (44), சுமன் (27), சென்னை கே.கே.நகரைச் சோ்ந்த கென், ஆகியோா்களை போலீசாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மற்ற 4 போ்கள் தப்பி ஓடிவிட்டனா். இது குறித்து மதுராந்தகம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.