மதுராந்தகம் அருள்மிகு மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ திருக்கல்யாணம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. இந்நிலையில் 5-ஆம் நாளான திங்கள்கிழமை இரவு கோயில் வளாகம் சுவாமி திருக்கல்யாண நிகழ்வுக்காக, மின்விளக்குகளாலும், வண்ண பதாகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இரவு மங்கள இசை, செண்டு மேள இசைகளுடன் சிறப்பு அலங்காரத்துடன் உற்சவா் மீனாட்சி உடனுறை வெண்காட்டீஸ்வரா் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.
அனைவருக்கும் உணவு விருந்து அளிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை யாளி, யானை ஆகிய வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தா.மேகவண்ணன் தலைமையில், விழா குழுவினா்களும், கிராம பொது மக்களும் செய்திருந்தனா்.
தொடர்புடையது

வெண்காட்டீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருநள்ளாறு கோயிலில் விநாயகா் உற்சவம் தொடக்கம்

ஆழ்வாா்குறிச்சி சுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பேரஸ்வரா் கோயில் திருக்கல்யாண உற்சவம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



