மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அஞ்சலக உதவியாளர் பணியிடம்: கூடாது கோட்ட வாரியான தேர்வு...

சென்னை, அக். 8அஞ்சலக உதவியாளர் பணியிடங்களுக்கு கோட்ட வாரியாக நடத்தப்படும் தேர்வு, முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக தகவல் அறிந்த வட்டாரத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.   தபால் அலுவலக கோட்ட அதிகாரிகள் மூலம் த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:16 pm

குறிஞ்சிவேலன்

சென்னை, அக். 8அஞ்சலக உதவியாளர் பணியிடங்களுக்கு கோட்ட வாரியாக நடத்தப்படும் தேர்வு, முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக தகவல் அறிந்த வட்டாரத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

  தபால் அலுவலக கோட்ட அதிகாரிகள் மூலம் தேர்வை நடத்தாமல், பொதுவான அமைப்புகள் வழியாக நடத்த வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

  தமிழக தபால் துறை வட்டம் 42 கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 6 கோட்டங்கள் உள்ளன.

  இந்தக் கோட்டங்களில் உள்ள தபால் அலுவலகங்களில் முக்கிய பணிகளை அஞ்சலக உதவியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மக்களிடம் நேரடியாக குறைகளைக் கேட்டு அவற்றைத் தீர்த்து வைக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

  ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலக உதவியாளர் பணியிடங்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும். ஆனால், 2006 - 2007 மற்றும் 2007 - 2008-ம் ஆண்டுகளில் தேர்வு நடத்தப்படவில்லை.

  கல்வித் தகுதி பிளஸ் டூ...  இந்தத் தேர்வுக்கு கல்வித் தகுதி பிளஸ் டூ மட்டுமே. ஆனால், கல்லூரியில் படித்து பட்டம் பெறுவது சர்வசாதாரணமாகி விட்ட சூழலில், அஞ்சலக உதவியாளர் பணியிடங்களுக்கு மட்டும் ஏன் "பிளஸ் டூ' கல்வித் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தபால் துறையில் பணியாற்றுவோரே கேள்வி எழுப்புகின்றனர்.

  ""அடிப்படைச் சம்பளம் ரூ. 9 ஆயிரம், பல்வேறு சலுகைகள் என மாத ஊதியமாக ரூ. 18 ஆயிரம் வரை அஞ்சலக உதவியாளர்களுக்குக் கிடைக்கிறது. இந்தப் பணி மிகவும் பொறுப்புள்ளது. கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை கையாள அதிக கல்வித் தகுதி அவசியம். ஆனால், தேர்வு எழுத "பிளஸ் டூ' போதும் எனக் கூறுகின்றனர். சி.பி.எஸ்.சி. கல்வி முறையில் படித்த மாணவர்களை தேர்வு எழுத அழைப்பதில்லை'' என்று தபால் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

  திடீர் தேர்வு ஏன்?  கடந்த இரண்டு ஆண்டுகளாக அஞ்சலக உதவியாளர் பணியிடங்களுக்குத் தேர்வு அறிவிக்கப்படவில்லை. தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவதற்காக இந்தத் தாமதம் நடந்தது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

  ஆனால், இப்போது 2006 முதல் 2008 வரையிலான இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து 569 இடங்களுக்கு திடீரென தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

  ""தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 15 கடைசி நாள். பல தபால் அலுவலகங்களில் விண்ணப்பம் இருப்பு இல்லை. இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தே விண்ணப்பத்தைத் தருகின்றனர். ஒவ்வொரு கோட்டத்துக்கும் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். திருநெல்வேலியில் உள்ள ஒருவர் தென் சென்னை கோட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். அவர் சென்னையில் வந்து தேர்வு எழுத வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள 42 அஞ்சலகக் கோட்டங்களிலும் ஒரே கேள்வித்தாள் கொடுக்கப்படும். கோட்டங்களில் உள்ள கண்காணிப்பாளர்கள் இந்தத் தேர்வை நடத்துகிறார்கள். கோட்ட வாரியாக தேர்வை நடத்தாமல் பொதுவான முறையில் அதாவது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகள் மூலம் தேர்வை நடத்த வேண்டும்'' என்று அந்தத் தேர்வை எழுதுவோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இவ்வாறு செய்வதன் மூலம், அஞ்சலக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வை எந்த முறைகேடும் இன்றி நடத்தலாம்.

  இப்போது நடைமுறையில் உள்ள தேர்வு முறை தபால் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் வாரிசுகளுக்கு சாதகமாக இருப்பதாக அந்தத் துறையைச் சேர்ந்தவர்களே கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.