புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இங்கிலாந்தின் "கிறிஸ்டி இன்டர்நேஷனல் கேன்சர் கேர்' மருத்துவமனையுடன் சென்னை மியாட் மருத்துவமனை வியாழக்கிழமை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மியாட் மருத்துவமனை தலைவர் மல்லிகா மோகன்தாஸ், "கிறிஸ்டி இன்டர்நேஷனல் கேன்சர் கேர்' மருத்துவமனை புற்று நோய் சிகிச்சைப் பிரிவு இயக்குநர் டாக்டர் ரிச்சர்ட் கோவன் ஆகியோர் ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர். இதுகுறித்து டாக்டர்கள் ரிச்சர்ட் கோவன், டாக்டர் சி.ஆர்.செல்வசேகர், கார்த்திக் மருதாசலம், வெங்கடேசன் சீனிவாசன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இங்கிலாந்தின் "கிறிஸ்டி இன்டர்நேஷனல் கேன்சர் கேர்' மருத்துவமனை கடந்த 125 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.மியாட் மருத்துவமனையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு இங்கிலாந்தின் கிறிஸ்டி மருத்துவமனை பயிற்சி அளிக்கும்.
முற்றிய புற்று நோய் அல்லது எந்தவொரு இடத்திலும் சரி செய்ய முடியாது எனத் தீர்மானிக்கப்பட்ட புற்று நோய்கள் குறித்து கிறிஸ்டி மருத்துவ நிபுணர்களுடன் மியாட் மருத்துவமனையின் புற்று நோய் மருத்துவர் குழு விவாதித்து சிகிச்சை அளிக்கும். இத்தகைய விவாதம் இணையம் மூலமும் செய்யப்படும். மியாட் நோயாளிகளுக்கு தேவைப்பட்டால் அதிநவீன சிகிச்சைகளுக்காக இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காமராஜருக்குப் பிறகு அதிக தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தவர் மு.க. ஸ்டாலின்! கே.எஸ். அழகிரி

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை

காஞ்சிபுரம்: திருமணம் முடிந்தவுடன் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி!

பெட்ரோல், டீசல் விலை உயர்வா? அமைச்சகம் விளக்கம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

