காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, சென்னையில் திங்கள்கிழமை 12 இடங்களில் நடைபெற்ற மறியல், முற்றுகைப் போராட்டத்தில் 635 பேர் கைது செய்யப்பட்டனர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தேமுதிகவினர் வேளச்சேரி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் வேளச்சேரியில் இருந்து சூலூர்பேட்டைக்கு செல்லும் ரயில் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 23 பெண்கள் உள்பட 235 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சாஸ்திரி பவனை முற்றுகை:
நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) சார்பில் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதற்காக வந்த விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தி 125 பேரை கைது செய்தனர்.
அகில சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் இரு இடங்களில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 60 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை முழுவதும் தடையை மீறி 6 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் மொத்தம் 635 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
மேலும் 6 இடங்களில் இதே கோரிக்கையை முன்வைத்து பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 60 பெண்கள் உள்பட 380 பேர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை... கேகேஆர் அணிக்கு முதல் வெற்றி எப்போது?

நாகர்கோவில் வந்தார் பிரதமர் மோடி!

காலிறுதியில் பார்சிலோனா போராடி தோல்வி: அத்லெடிகோ அறையிறுதிக்கு முன்னேற்றம்!

அதீத பேட்டரி திறனுடன் வெளியான ஓப்போ எஃப்33, எஃப்33 ப்ரோ!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை

