“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

காலரா: சென்னையில் குடிநீரை ஆய்வு செய்ய உத்தரவு

தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் காலரா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னை முழுவதும் குடிநீரை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On :29 மார்ச் 2018, 10:50 pm

தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் காலரா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னை முழுவதும் குடிநீரை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு பேருக்கு காலரா பாதித்தது. மேலும் மூன்று பேருக்கு காலரா அறிகுறிகள் கண்டறியப்பட்டன. 
இதனையடுத்து மருத்துவமனையில் குடிநீர் வாரிய அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினர். தண்ணீர் மற்றும் உணவு மாதிரிகள் ஆய்வுக்கான சேகரிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை முழுவதும் விநியோகிக்கப்படும் குடிநீரை ஆய்வு செய்ய குடிநீர் வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கேன் குடிநீர், உணவுகளை ஆய்வு செய்யவும் உணவு பாதுகாப்புத் துறைக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.