தில்லியில் இருந்து புறப்பட்டார் மோடி! 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 1,000 வரவுவைப்பு! அதானிக்கு எதிரான வழக்கை கைவிட டிரம்ப் நிர்வாகம் முடிவு! 10 பில்லியன் டாலர் முதலீடு?பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! தில்லியில் சிஎன்ஜி விலை ரூ. 2 உயர்வு!
/

கடலில் மூழ்கி பள்ளி மாணவர் சாவு

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் கடலில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார். 

Updated On :26 பிப்ரவரி 2019, 4:13 am IST


சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் கடலில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்தார். 
மேடவாக்கம் அடுத்த நுக்கம்பாளையம் மாணிக்கம் நகர் கக்கன் தெருவைச் சேர்ந்த ஆசீர்வாதத்தின் மகன் சந்தோஷ் (16). இவர் மேடவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். சந்தோஷ், தனது நண்பர்கள் பாலாஜி, நவீன் ஆகியோருடன் ஞாயிற்றுக்கிழமை ஈஞ்சம்பாக்கம் பாரதி அவென்யு கடற்கரைக்கு வந்தார்.
அங்கு 3 பேரும் கடலில் குளித்தபோது பெரிய அலையில் சிக்கி சந்தோஷ், கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதைப் பார்த்த அவரது நண்பர்கள், சந்தோஷை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் சந்தோஷின் சடலம், அந்தப் பகுதியில் கரை ஒதுங்கியது. இது தொடர்பாக நீலாங்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.